ரிஷாப் பன்ட்-டின் விக்கெட் கீப்பிங்கில் டெக்னிக்கல் பிரச்னை இருப்பதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர். விக்கெட் கீப்பரான இவர், 46 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டி களிலும் விளையாடியிருக்கிறார்.
ரிஷாப் பன்ட்-டின் விக்கெட் கீப்பிங் பற்றி அவர் கூறும்போது, ’’ரிஷாப், எனது இளமை காலத்தை ஞாபகப்படுத்துகிறார். அவரது அணுகுமுறை, தோனியை போன்றே இருக்கிறது. ஆனால் இப்போதே, அவரை புகழின் உச்சத்தில் தூக்கி வைக்கவேண்டாம். ஆனால், அவரை ஊக்கப்படுத் துங்கள். ஆனால், டெக்னிக்கலாக அவர் சரியான விளையாடவில்லை. தவறு இருக்கிறது.
அவர் அதை திருத்த நேரம் கொடுக்க வேண்டும். அவர் தன் திறமையை கண்டிப்பாக மேம்படுத்துவார். நல்ல விக்கெட் கீப்பர், கால்களை அங்கும் இங்கும் இயக்க வேண்டும். பந்தை நோக்கியே ஓட வேண்டும். எல்லா நேரமும் டைவ் அடிக்க வேண்டிய அவசியமில்லை. கால்களை சரியாகப் பயன்படுத்தினாலே போதும்’’ என்றார்.