ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் மயங்க் மார்கண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கும் மயங்க் மார்கண்டே மீது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் 2018 ஐபிஎல் தொடரில் அவரின் அற்புதமான பந்துவீச்சுதான் அதற்கு காரணம். வலக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த ஐபிஎல் தொடரில், 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை சாய்த்து இருந்தார். 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்.
ஐபிஎல் தொடரில் இவரது கூக்ளி பந்துவீச்சு மிகவும் பிரபலமானது. அதுவும், சிஎஸ்கே கேப்டன் தோனியை தன்னுடைய கூக்ளி பந்துவீச்சு மூலம் அவுட் ஆக்கினார். சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மயங்க் மார்கண்டே எடுத்த 5 விக்கெட்கள் முக்கியமான காரணம்.
7 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும், இந்திய ஏ அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்களையும் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.