இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, வலுவான நிலையில் உள்ளது.
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் நடந்து வருகிற து. இதில், முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, 330 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்கார மயங்க் அகர்வால் 95 ரன்னும் ஹனுமா விஹாரி 114 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 425 ரன் குவித்தது. அந்த அணியின் அக்ஷய் கர்னேஸ்வர் 102 ரன் எடுத்தார். இது, இவருக்கு முதல் சதம் ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 40 ரன்னுடனும் கேப்டன் ரஹானே 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய விஹாரி, அபார சதம் அடித்தார். இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங் ஸிலும் அவர் சதம் அடித்தது குறிப்பிடத் தக்கது.
மதியம் டிரிங்ஸ் இடைவேளையின்போது ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, 2 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்துள்ளது. விஹாரி 145 ரன்னுடனும் ரஹானே 87 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.