இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் தொடரில் இருந்து, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. வரும் 24 மற்றும் 27ஆம் தேதிகளில் டி20 போட்டிகளிலும் மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய தேதிகளில் ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணிதான், உலகக் கோப்பைக்கான உத்தேச அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், டி20 தொடரில் மட்டும் இடம் பிடித்துள் ளார். ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரிஷாப் பன்ட் இரண்டு தொடர்களில் நீடிக்கிறார். தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ரா குல் மாற்று தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் உலகக் கோப்பைக்கான அணியில், தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங் களில் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.
(ரிஷாப்)
கடந்த 2 ஆண்டுகளாக நன்றாக ஆடியும் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கான பின்னணியை பரிசீலிக்க வேண்டும் என்று சிலர் தெரிவித் துள்ளனர். இது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின், ’சின்னப்பிள்ளைத்தனமான அரசியல்’ என்றும் சாடியுள்ளனர்.
‘’இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே, உங்கள் அரசியலும் பாகுபாடுகளும் வித்தியாசமாக, அரிதான ஒன்றாக இருக்கிறது. இந்திய பிட்ச் களில் ரிஷாப்பை விளையாட வைப்பது, உலகக் கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கை நீக்குவதற்கான தெளிவான உத்தி. இது, ஸ்கூல்பாய் பாலிடிக்ஸ்!’’ என்று பிரவீன் என்பவர் தெரிவித்துள்ளார்.
(கே.எல்.ராகுல்)
‘’இந்திய கிரிக்கெட் வாரியத்தின், இந்த அணி தேர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையிலேயே ஏமாற்றமாக இருக்கிறது. சிறப்பான பேட்டிங் திறமை இருந்தும், தினேஷ் கார்த்திக் உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்றுதான் சொல்வேன். நமக்கான நேரம் வரும் என்று காத்திரு ங்கள். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று நந்தி என்ற ரசிகர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, ’ரிஷாப்பை தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு யாருடைய இடம் கிடைக்கும்? ஜாதவ்? அல்லது ராயுடு? அதோடு, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படாதது இறுதி முடிவல்ல என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘’நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள், தினேஷ் கார்த்திக்கா, கே.எல்.ராகுலா யார் பெஸ்ட் ? என்று. எல்லோரும் தினேஷ் கார்த்திக் கைதான் சொல்வார்கள். கடந்த ஒரு வருடமாக அவரது ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இருந்தும் அவர் இந்திய கிரிக்கெட்வாரியத்தால் தொடர் ந்து நிராகரிக்கப்படுகிறார். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே, எந்த அடிப்படையில் கே.எல்.ராகுலை தேர்வு செய்தீர்கள் என்பதை சொல்ல முடியுமா?’’ என்று புபேஷ் தாவே என்ற ரசிகர் கேட்டுள்ளார்.
இதே போல பல ரசிகர்கள், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.