உலகக் கோப்பை தொடருக்குப் பின், ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்ட கெயில் தனது அதிரடியால், உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர். கடந்த சில மாதங்களாக, ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் இருந்த அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் மே மாதம் இறுதியில் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
284 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 23 சதங்களுடன் 9 ஆயிரத்து 727 ரன்கள் குவித்துள்ளார். 165 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள கெயில், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
.