cbecpy@gmail.com      +9198944 75754

இன்றைய போட்டியிலும் பிரவோவிற்கு ஓய்வு ?

Home / Cricket / இன்றைய போட்டியிலும் பிரவோவிற்கு ஓய்வு ?
  17-Apr-2019  
Cricket Back to

ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை விளையாடவுள்ள இன்றைய ஐபிஎல் போட்டியிலும் பிரவோவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் 33வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதனாத்தில் இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை போட்டி என்பதால் தமிழக ரசிகர்கள் சற்று உற்காசத்துடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

கடந்த முறை கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் சென்னை அணியில் ஆல்ரவுண்டர் பிரவோ இடம்பெறவில்லை. சிறிய காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அன்று சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று விளையாடும் போட்டிக்காக சென்னை வீரர்கள் மைதானத்தில் பயிற்சி பெறும் போது, பிரவோவும் பயிற்சி எடுத்தார். 

எனவே அவர் அணியில் விளையாடுவாரா ? என்ற கேள்விகள் எழும்பின. ஆனால் இன்றைய போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயம் முழுமையாக குணமடையாத நிலையில் பிரவோவை சிரமப்படுத்த சென்னை அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று சென்னை முதலிடத்தில் இருப்பதால் பிரவோவை உடனே சேர்க்க வேண்டிய கட்டாயத்திலும் சென்னை அணி இல்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.