தன்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸரை தோனியே விரும்பியுள்ளார் என்று ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
2019 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் தன்னுடைய ஹெலிகாப்டர் சிக்ஸர் மூலம் ரசிகர்கள் மனதில் வலுவான இடம் பிடித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. தான் ஒரு சிறந்த ‘ஹிட்டர்’ என்பது ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார். மிடில் ஆர்டரில் களம் இறங்கி வரும் அவர் குறைவான பந்துகளை மட்டுமே சந்தித்து அதிக ரன்களை விளாசுகிறார். மும்பை இண்டியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். ஆனால், பெங்களூர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 14 பந்தில் 32 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசினார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்தில் 31 ரன் எடுத்தார்.
குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிராக வெறும் 8 பந்தில் 25 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டியிலும் 3 சிக்ஸர் அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலே 11 பந்துகளை மட்டுமே சந்தித்து 28 ரன்கள் குவித்தார். அதில் மூன்று சிக்ஸர்கள் விளாசினார். அந்த வரிசையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிராகவும் 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அதிலும், 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசினார்.
மேலும், ஒரு ஆல்ரவுண்டராகவும் ஹர்திக் பாண்ட்யா ஜொலிக்கிறார். 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 218 ரன்கள் எடுத்துள்ளதோடு, 8 விக்கெட் சாய்த்துள்ளார். அவரது பந்துவீச்சு எளிதில் அடிக்கும் படியாக இருந்தாலும், சில நேரங்களில் அணியின் வெற்றிக்கும் உதவுகிறது. பேட்டிங்கில் அவரது ஸ்டிரைக் ரேட் 194.64.
ஹெலிகாப்டர் சிக்ஸர் குறித்து ஹர்திக் பேசுகையில், “ஒரு போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேன் என்று நான் நினைத்ததில்லை. வலைப்பயிற்சியில் அதனை நான் முயற்சி செய்து வந்தேன். நான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் பிடிக்கிறதா என்று அவரது அறைக்கு சென்று கேட்டேன். சிறப்பாக இருந்ததாக அவர்” கூறினார்.