டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 163 ரன் குவித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மயங்க் அகர்வால் 2, மில்லர் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடினார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அதனால் பஞ்சாப் அணியின் ரன் உயர்ந்தது.
மந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாம் கரன் டக் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 37 பந்தில் 69 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் லமிசனே 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரபாடா, அக்ஸர் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.