cbecpy@gmail.com      +9198944 75754

“தோனி எங்களுக்கு மகத்தான அச்சத்தை காட்டிவிட்டார்” - மிரண்டுபோன கோலி

Home / Cricket / “தோனி எங்களுக்கு மகத்தான அச்சத்தை காட்டிவிட்டார்” - மிரண்டுபோன கோலி
  22-Apr-2019  
Cricket Back to

தோனி தங்களுக்கு மகத்தான அச்சத்தை காட்டிவிட்டதாக பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலாக லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 161 ரன்கள் சேர்த்தது. பின்னர், விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றி பெற்றது. 

    

இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 5 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசினார் தோனி. அதில் ஒரு பந்து மைதனாத்திற்கு வெளியேயே சென்றுவிட்டது. இருப்பினும், கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 

     

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, “ஒரு சிறிய வித்தியாசத்தில் போட்டியை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய போட்டியில் இப்படி சிறிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. தோனி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தோனி மகத்தான அச்சத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டார். கடைசி பந்தை தவிர்த்து, இப்படிதான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். போட்டி முழுவதும் உணர்வுபூர்வமாக இருந்தது” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.