பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் தோற்றது. அத்துடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் நின்றுவிட, அடுத்த மூன்று போட்டிகளையும் இங்கிலாந்து வென்றுவிட்டது. இதனால் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் பரிதாப நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஹெட்டிங்லி மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்புடன் விளையாடினர். அணியின் ஸ்கோர் 63 ரன்கள் என்றிருக்கும்போது, ஜேம்ஸ் வின்ஸ் 33 (32) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் பேர்ஸ்டோவ் 32 (21) ரன்களில் வெளியேறினார். இதற்கிடையே வந்த ரூட் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.