cbecpy@gmail.com      +9198944 75754

இந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்

Home / Cricket / இந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்
  17-Jun-2019  
Cricket Back to

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.

இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. 117 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், 129 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. பாபர் அஸாம் 48, பஹார் ஜமான் 62, முகமது ஹபீஸ் 9, சோயிப் மாலிக் (0), கேப்டன் சர்பராஸ் அகமது (12) என வீழ்ந்தனர்.

இதனால், அந்த அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு மீண்டு போட்டி தொடங்கியது. பின்னர் டக்வெர்த் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும். மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

0) உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் (336) நேற்றைய போட்டியில் எடுக்கப்பட்டது. கடந்த உலக கோப்பையில் 7 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

0) இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக 7வது முறை பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது இந்தியா.

0) உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா (140) பெற்றார். ஏற்கனவே 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் விராத் கோலி (107 ரன்) சதம் அடித்திருந்தார்.

0) பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம் கண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார். கடந்த ஆண்டு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 111 ரன்கள் எடுத்திருந்தார்.

0) அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் வரிசையில் தோனி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது 341 ஆவது ஒரு நாள் போட்டியில் நேற்று ஆடினார். சச்சின் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார்.

0) டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டி என சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர் விளாசியவர் (356) என்ற பெருமையை பெற்றிருந்தார் தோனி. நேற்று அதை முறியடித்தார் ரோகித். அவர் 357 சிக்சர்கள் அடித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.