இந்தியாவை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அழுத்தத்தை சந்திக்க நேர்ந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி நடந்து முடிந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து 7வது முறையாக இந்தத் தோல்வியை சந்திக்கிறது.
இந்தத் தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணியினரை ரசிகர்கள் கடுமையாக சாடினர். இதுதவிர வாசிம் அக்ரம் மற்றும் அக்தர் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், கேப்டனுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ், ‘சில வருடங்களில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே பெரும் மாற்றம் நேர்ந்துள்ளது. மீண்டும் பழையபடியே நடந்துள்ளது. நாங்கள் 90களில் சிறப்பாக விளையாடினோம். அந்த நேரத்தில் எங்களை எதிர்கொள்ள இந்தியா கஷ்டப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே அழுத்தத்துடன் விளையாடும். ஆனால் காலம் இப்போது மாறிவிட்டது. இந்திய வீரர்களுக்கு இணையாக உடல் தகுதியுடன் பாகிஸ்தான் வீரர்கள் இல்லை. அவர்கள் இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும் என அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் போட்டியில் அழுத்தத்துடன் விளையாடினர். ஆனால் இந்தியா எளிமையாக விளையாடி வென்றுள்ளனர்” என்று கூறினார்.