இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் கடந்தாண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் திடீரென அர்ஜூன் டெண்டுல்கர் எடுத்த விக்கெட் ஒன்று வைரலாகி வருகிறது. ஆம், அர்ஜூன் டெண்டுல்கர் இப்போது இங்கிலாந்தின் சர்ரே கவுண்ட்டி அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.
எம்சிசி இளம் வீரர்களுக்கும் - சர்ரே அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரின் வேகப் பந்து வீச்சில் சர்ரே அணி பேஸ்ட்மேன் க்ளீன் போல்ட் ஆவார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. சர்ரே அணியின் வீரர் டெய்லி 4 ரன்கள் எடுத்து விளையாடியபோது, அர்ஜூன் டெண்டுல்கரின் வேகப்பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாராட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். 11 ஓவர்கள் வீசிய அவர், 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார். எனினும் இந்த 11 ஓவர்களில் 4 நோபால்களை வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.