டி20 போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மும்பை நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் யுவராஜ் சிங் தனது முடிவை உறுதியாக தெரிவித்துவிட்டார். அத்துடன் மிகவும் ஆழமாக சிந்தித்த பின்னரே ஓய்வு என்ற முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் அவர் ஓய்வை அறிவித்ததால், இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா ? அல்லது அதிலும் ஓய்வு பெற்றுவிடுவாரா ? ஆகிய கேள்விகள் ரசிகர்கள் உட்பட அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டி20 தொடர்களில் விளையாடி அனுமதி வழங்குமாறு யுவராஜ் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் அவர் ஐபிஎல் உள்ளிட்ட டி20 தொடர்களில் விளையாடுவார் எனத் தெரியவந்துள்ளது.