தன்னுடைய மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. பென்ஸ்டோக் 70(92) ரன்களுடன் களத்தில் இருந்தார். டிரெண்ட் போல்ட் அந்த ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பென்ஸ்டோக் ரன் எதுவும் எடுக்கவில்லை. அதனால், 4 பந்துகளில் 15 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. அதனையடுத்து, மூன்றாவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார் ஸ்டோக்ஸ். பின்னர், 3 பந்துகளில் 9 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
பவுல்ட் வீசிய நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரியை எல்லைக் கோட்டை சென்றடைந்தது. அதனால், ஓடி எடுத்த இரண்டு ரன்களுடன், ஓவர் த்ரோ மூலமாக 4 நான்கு ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. அந்த பந்திலும் சிக்ஸர் அடிக்கப்பட்ட கணக்குதான்.
அதனால், இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் என்ற எளிதான நிலைக்கு இலக்கு வந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டு ஸ்கோர் சமநிலையை அடைந்தது. அந்த 4 ரன்கள் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதாவது இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், உலகக் கோப்பையை வென்றதற்கு பின்னர் பேசிய ஸ்டோக்ஸ், “எல்லோருடைய ஒட்டுமொத்த கடினமான உழைப்பும் எங்களை சாம்பியன்ஸ் ஆக்கியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானது. ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த 6 ரன்களுக்காக என் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன். எங்களுக்குதான் கோப்பை என்று நட்சத்திரங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
Dear @ICC Time to Introspect on this. #CricketRules #CWC19Finals #NZvsENG #ENGvsNZ pic.twitter.com/FjNlT1WT7g
— amit dadhich (@amit12354) July 15, 2019