வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, அணியை தேர்வு செய்கிறது. கேப்டன் விராத் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஷிகர் தவான் காயத்தில் இருந்து மீண்டுவிட்டாரா என்பதும் இந்தத் தொடரில் தோனிக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், இந்த தொடருக்கு இளம் வீரர்கள் சேர்க்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய ஏ அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையா டும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.