ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 382 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 2-க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, ஒல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில், 294 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய தரப்பில், மார்ஷ் 5 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 225 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக ஸ்மித் 80 ரன்கள் எடுத்தார்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணியில், டென்லி 94 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 2 விக்கெட் உள்ள நிலையில், 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. ஆர்ச்சர் 3 ரன்களுடனும் லீச் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்கிறது.