cbecpy@gmail.com      +9198944 75754

2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை

Home / Cricket / 2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை
  08-Oct-2019  
Cricket Back to

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.

இலங்கை - பாகிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை இலங்கை குவித்தது. அந்த அணியில் பானுகா ராஜபக்ச 77 (48), ஷெகான் ஜெயசூர்யா 34 (28) ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் இமாத் வாஷிம் 47 (29), ஆசிஃப் அலி 29 (27) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டி20 போட்டியை இலங்கை வென்றிருந்ததால், 2-0 என்ற கணக்கில் கோப்பை கைப்பற்றியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.