உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, நடுவரிடம் குழந்தையைபோல் அழுது அடம்பிடித்த கிறிஸ் கெய்லின் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தென்னாப்ரிக்காவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டி ஒன்றில் முதல் ஓவரை வீசிய கிறிஸ் கெயில், நடுவரிடம் LBW முறைக்கு வாதிட்டார். ஆனால் நடுவர் விக்கெட்டை வழங்கவில்லை. உடனடியாக தன்னை ஒரு குழந்தைபோல பாவித்து குழந்தை அழுது அடம்பிடிப்பதுபோல கெயில் மீண்டும் வாதிட்டார்.
கெயிலின் இந்த செயலைக் கண்ட நடுவர் தன்னையும் மறந்து வாய்விட்டு சிரித்தார். நடுவர் மட்டுமின்றி மைதானத்தில் இருந்தவர்களுக்கும், டிவியில் கிரிக்கெட்டை பார்த்தவர்களுக்கும் இது சிரிப்பை வரவழைத்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் அளவில் மிகப்பெரிய ஆளாக இருந்தாலும், கிறிஸ் கெயில் ஒரு குழந்தை தான் என பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
CAPTION THIS
We’ll go first...
" Come on, surely one more match wouldn't hurt "
Until we meet again @henrygayle