துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அணியின் நலன் கருதி விளையாடும் வகையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில் இப்போட்டித் தொடரில் விளையாடும் வீரர்கள் தனிப்பட்ட நலன் கருதி விளையாடுவதாகவும் டெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி துலீப் ட்ராபி போட்டித் தொடரை அணி உணர்வுடன் விளையாடும் வகையில் மாற்றி அமைப்பதில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஞ்சி கோப்பைப் போட்டித் தொடர் முடிவடைந்ததும், இப்போட்டித் தொடரை நடத்தலாம் என்று டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார். ரஞ்சிக் கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் மற்றும் 19 வயது, 23 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அணிகளை இதில் பங்கேற்கச் செய்யலாம் என்றும் டெண்டுல்கர் கூறி உள்ளார்.