cbecpy@gmail.com      +9198944 75754

“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி

Home / Movies / “உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி
  10-Jan-2019  
Movies Back to

‘பேட்ட’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் அனைத்து பெருமைகளும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையே சேரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் தமிழகம் முழுவதும் 450-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு திரையரங்கிலும் மேளதாளம், கட்அவுட் என ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் தமிழகத்திலேயே மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து தூத்துக்குடி ரசிகர்கள் ‘பேட்ட’ படத்தை கொண்டாடியுள்ளனர். அதுவும் 145 அடியில் அந்த கட்அவுட்டை வடிவமைத்துள்ளனர். ஏற்கனவே, இலங்கையில் 80 அடி உயர கட் அவுட் வைத்திருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி ரசிகர்கள் அந்தச் சாதனையை முறியடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘பேட்ட’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் அனைத்து பெருமைகளும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையே சேரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “எல்லோருக்கும்  புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள். ‘பேட்ட’ படம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக கேள்விப் பட்டேன். ரொம்ம சந்தோஷம். ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தானே நம் வேலை. அதுதானே முக்கியம். அனைத்து பெருமைகளும் கார்த்திக் சுப்புராஜையே சேரும். முதலில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டையும், சீனையும் உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க. ரொம்ப சந்தோஷம்.” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.