cbecpy@gmail.com      +9198944 75754

சென்னையில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் வாக்குமூலம்

Home / Movies / சென்னையில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் வாக்குமூலம்
  14-Feb-2019  
Movies Back to

சென்னை கொளத்தூரில் சினிமா துணை நடிகையான மேரிஷீலா மரியா ராணி என்ற யாசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா மரியா ராணி என்ற யாசிகா. 21 வயதாகும் இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இதனிடையே இவருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் வீடு எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் தூக்கில் தொங்கியவாறு யாசிகாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் யாசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யாசிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று நாட்களுக்குமுன் அரவிந்த் யாசிகாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டது தெரியவந்துள்ளது. 

மேலும் தமது தற்கொலைக்கு அரவிந்த்தான் காரணம் எனவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னை கொடுமை படுத்திய காதலன் அரவிந்த்துக்கு தக்க தண்டனை பெற்றுத்தரவேண்டும் எனவும் கூறி தமது தாயின் செல்போன் எண்ணுக்கு யாசிகா குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.