cbecpy@gmail.com      +9198944 75754

பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

Home / Movies / பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு
  17-Feb-2019  
Movies Back to

ஃபெஃப்சி என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் செயலாளராக அங்கமுத்து சண்முகமும், பொருளாளராக பி.என்.சுவாமிநாதனும் மீண்டும் தேர்வாகி உள்ளனர்.

22 யூனியன்களை உள்ளடக்கிய ஃபெஃப்சி யின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து, ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மூர்த்தி என்பவர் போட்டியிட்டார். மொத்தம் 65 பேர் வாக்களித்தனர். இதில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு வெற்றி பெற்றார்.

ஆர்.கே.செல்வமணி அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட தீனா, ஷோபி பவுல்ராஜ், ஸ்ரீதர், செந்தில்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரும், இணைச்செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜா, சபரி கிரீசன், ரமணபாபு, சம்பத்குமார், ஸ்ரீபிரியா ஆகிய ஐந்து பேரும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.