பாகிஸ்தான் நடிகர்களையோ, கலைஞர்களையோ இந்திய சினிமாவில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ -முகமது என்ற பயங்கரவாத அமைப்பு, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ் தானுக்கு எதிராகவும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான், தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்களையோ, கலைஞர்களையோ இந்திப் படங்களில் பயன்படுத்துவதற்கு, அனைந்திந்திய திரைப்பட தொழிலா ளர் சங்கம் தடை விதித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் இந்தி சினிமாவில் பணியாற்ற அதிகாரப் பூர்வமாகத் தடை விதிக்கப்படுகிறது.
மீறி, பாகிஸ்தான் கலைஞர்களை யாராவது பயன்படுத்தினால், அனைந்திந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தால் தடை செய்யப்படுவார்கள் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சி, பாகிஸ்தான் கலைஞர்களை, இந்தி சினிமா வில் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண் டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் திரைப்பட தொழிலாளர் சங்கம், பாகிஸ்தான் கலைஞர்களுக்குத் தடை விதித்துள்ளது.