cbecpy@gmail.com      +9198944 75754

’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு

Home / Movies / ’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு
  20-May-2019  
Movies Back to

’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்குவதில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்ததால், வேறு இயக்குனரை வைத்து படத்தை முடிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம் ’காஞ்சனா’. இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது இந்தியில் ’லக்‌ஷ்மி பாம் (Laxmmi Bomb)’  என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்குமார் ஹீரோ. ராகவா லாரன்ஸ் இயக்குனராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்திக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கியாரா அத்வானி ஹீரோயின். அக்‌ஷய்குமார் நடித்த சில ஹாரர் காமெடி படங்கள் இந்தியில் ஹிட்டாகி இருந்ததால் இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின்மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து தயாரிக்கின் றனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. லாரன்ஸ் இயக்கினார். இந்நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் ஹீரோ அக்‌ஷய் குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இது, இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு தெரியாது. அவருக்குத் தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டர வெளியிடப்பட்டதால் கோபமடைந்தார். இதையடுத்து படத்தில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்தார் ராகவா லாரன்ஸ்.

’’தமிழில், ’மதியாதார் வாசலை மிதியாதே’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த உலகில் பணம், புகழை தாண்டி, சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். அதனால் ’லக்‌ஷ்மி பாம்’ படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் குறிப்பிட முடியாது. எனக்கு தெரியாமலேயே, என்னை ஆலோசிக்காமலேயே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் தந்துள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது’’ என்று தெரிவித்திருந்தார் அவர்.

ராகவா லாரன்ஸின் முடிவு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மும்பையில் நேற்று மாலை கூடி ராகவா லாரன்ஸின் முடிவு பற்றி ஆலோசித்தனர். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பின், அவர்கள் வேறு இயக்குனரை வைத்து படத்தை முடிக்க முடிவு செய்தனர்.

‘’படத்தின் இரண்டாவது ஷெட்யூல் செப்டம்பர் மாதம் மும்பையில் தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அக்‌ ஷய்குமார். அதற்குள் பிரச்னை முடிந்துவிடும். லாரன்ஸுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் தகவல் தொடர்பில் சிக்கல். அதை விரிவாக விளக்க முடியாது. அதனால் வேறு இயக்குனரை வைத்து படத்தை முடிக்க முடிவு செய்துள்ளோம். அவர் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட்டு விடும்’’ என்று படக்குழு தெரிவித்துள்ளது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.