கிரேஸி மோகன் உயிரிழந்த நிலையில் அவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிரேஸி மோகன் உயிரிழப்பு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், “கிரேஸி மோகன் மறைந்தது சினிமா, திரையரங்கம் மற்றும் சிரிப்பவர்களுக்கு பெரும் இழப்பு. அவரைப் போல் வேறொருவர் வழ இயலாது. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ், “கிரேஸி மோகனை இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவர் ஒரு எழுத்தறிஞர். அவரை அனைவரும் பிரிந்து வாடுவோம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு, “அடக் கடவுளே கிரேஸி மோகன் இறந்துவிட்டார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு, “கிரேஸி மோகன் இறந்த செய்தி அண்மையில் அறிந்தேன். துரதிருஷ்டவசமாக அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு மேதை சகாப்தம் ஆகிவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா, “சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் இயக்குநர் பிரசன்னாவை சந்தித்தபோது, நாங்கள் கிரேஸி மோகன் பற்றி பேசினோம். அவர் எங்களது படத்திற்கு ஆற்றிய பங்கு குறித்தும், அவரது வசனங்களின் உச்சபட்ச தாக்கம் குறித்தும் உரையாடினோம். அவரது நகைச்சுவை உணர்வு நிற்காதது. அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். உங்கள் பிரிவால் வாடுகிறோம்” என்று கூறியுள்ளார்.
ராதிகா சரத்துக்குமார், “உங்கள் பிரிவால் வாடுகிறோம். மிகவும் துயரமடைந்தேன்” என்று பதிவு செய்துள்ளார்.
நடிகர் சிபிராஜ், “கிரேஸி மோகன் இறந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரது வசனத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. பெரும் இழப்பு” என்று பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, உடனே சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.