நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை அடுத்த பூந்தமல்லியில் விஜய் ரசிகர்கள் 108பேர் ரத்ததானம் செய்துள்ளனர்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு வரும் 22-ம் தேதி. இதனை அவரது ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாட ஆரம்பித்துள்ளனர். சமீபகாலமாக இவரது பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலதிட்ட உதவிகள் மற்றும் பொது பணிகளில் முன்னெடுத்து கொண்டாடி வருகின்றனர் வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரத்ததான முகாம் பூந்தமல்லியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 108 பேர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்தம் தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.