cbecpy@gmail.com      +9198944 75754

''வடசென்னை2 உருவாகும்: வதந்திகளை நம்ப வேண்டாம்'' - தனுஷ்

Home / Movies / ''வடசென்னை2 உருவாகும்: வதந்திகளை நம்ப வேண்டாம்'' - தனுஷ்
  15-Jul-2019  
Movies Back to

வடசென்னை இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்

தனுஷுடன் வெற்றிமாறன் இணைந்த 3வது படம் ‘வடசென்னை’. இப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர் என திரைபட்டாளமே  இடம்பெற்றிருந்தது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளதாக ஏற்கெனவே படக்குழு தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

இதனிடையே, வடசென்னை இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நடிகர் தனுஷின் ரசிகர்கள் பலரும் இந்த தகவலை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர். 

இந்நிலையில், இது குறித்து நடிகர் தனுஷ் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என் ரசிகர்களிடையே என்ன குழப்பம் என்று தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் உருவாகும். எனது படங்கள் குறித்து எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வரும் வரை எந்தவிதமான தகவல்களையும் நம்ப வேண்டாம். நன்றி” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.