‘பிகில்’ பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கூடாது என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேனர்கள் வைக்ககூடாது என தனது ரசிகர் மன்றங்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ‘பிகில்’ பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்ககூடாது கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சுபஸ்ரீயின் மரணத்திற்கு பிறகு பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.