பாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கும் ரஜினியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த், 10 நாட்கள் ஆன்மிகப் பயணமாக கடந்த 13 ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். மகள் ஐஸ்வர்யாவுடன் 5 நாள் பயணமாக இமயமலைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில், இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த் அங்குள்ள பாபா ஆசிரமத்திலுள்ள கடையில் புத்தகம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்திற்கு சென்றார். அதன்பின் பாபா ஆசிரமத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள புத்தக நிலையம் ஒன்றில் புத்தகம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவர் ‘தர்பார்’ டப்பிங்கில் பங்கேற்க உள்ளார். பின்பு, இயக்குநர் சிவா இயக்கவிருக்கும் ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தின் மீது முழுக் கவனம் செலுத்த உள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்படத்தக்கது.