‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படமாக்குகிறார் மணிரத்னம். இதில் நடிக்க 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய், சத்யராஜ், ரகுமான், ஜெயராம், அமலாபால் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமை என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார்.
ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அரண்மனை செட் அமைத்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வரும் டிசம்பர் 12ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், தற்போது இறுதிக்கட்ட திரைக்கதை ஆலோசனைகள் சென்றுகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.