cbecpy@gmail.com      +9198944 75754

“பொள்ளாச்சி பாலியல் பிரச்னைக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல” - கே.பாக்யராஜ் 

Home / Movies / “பொள்ளாச்சி பாலியல் பிரச்னைக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல” - கே.பாக்யராஜ் 
  26-Nov-2019  
Movies Back to

பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் ஆண்கள் மட்டுமே காரணமல்ல எனவும் பெண்கள் தான் மூலகாரணம் எனவும் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 

‘கருத்துகளை பதிவு செய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செல்போன் வந்ததும் போய்விட்டது. எங்கே பார்த்தாலும் செல்போன் பேசிக்கொண்டே செல்கிறார்கள். அப்படி என்னதான் பேசுகிறீர்கள். பாலியல் பிரச்னைக்கு பெண்கள் தான் மூலக்காரணம். ஆண்கள் தவறான பழக்கம் இருந்தாலும் வீட்டை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் வேறு ஆண்களுடன் செல்லும் பெண்கள், குழந்தைகளையும் கணவர்களையும் கொலை செய்ய துணிகின்றனர். 
அதனால்தான் பெண்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு சுயக்கட்டுப்பாடு வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த செல்போன் வந்ததால் பெண்கள் கட்டுப்பாட்டை தாண்டி எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றனர். தவறு செய்வதற்கு ஈஸியாக வழி கிடைக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. அதுபோலத்தான், பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை. பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும்.

ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் ஆண்கள் மட்டுமே காரணமல்ல. பெண்களின் பலவீனமே காரணம். அதை அவன் பயன்படுத்தி கொண்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால் அந்த வாய்ப்பை பெண்கள் உண்டாக்கி கொடுத்ததுதான் மிகப்பெரிய தவறு” எனத் தெரிவித்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.