cbecpy@gmail.com      +9198944 75754

ஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி 

Home / Movies / ஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி 
  02-Dec-2019  
Movies Back to

‘கா’ படத்திற்கான 30 நாள்கள் படப்பிடிப்பை நடிகை ஆண்ட்ரியா நிறைவு செய்துள்ளார்.

இயக்குநர் நாஞ்சில் இயக்கி வரும் திரைப்படம் ‘கா’. இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதையொட்டி படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் நடிகை ஆண்ட்ரியா வன உயிரின புகைப்படக் கலைஞராக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு அடர்ந்த வனப்பகுதியில் நடைபெற்றது. மொத்தம் 30 நாள்கள் ஒளிப்புகா காட்டிற்குள் ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதில் பங்கேற்று தனக்கான காட்சிகளில் அவர் நடித்து வந்தார். 

இந்நிலையில் மூணார் வனப் பகுதியில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பை ஆண்ட்ரியா நிறைவு செய்துள்ளார்.  இதுவே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குநர் நாஞ்சில், “மூணார் வனப் பகுதிக்குள் காட்சிகளை படமாக்கி வந்தோம். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு காட்டு யானை திடீரென்று புகுந்தது. இதனைக் கண்டு படக்குழுவே அதிர்ச்சியடைந்து விட்டது”எனக் கூறியுள்ளார். மேலும் வனக் காவலர் உதவியுடன் நாங்கள் எல்லோரும் தப்பிப் பிழைத்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தில் நடிகரும் தற்காப்பு கலைஞருமான சலீம் கவுஸ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ‘கா’ என்றால் தமிழில் ‘அடர்ந்த காடு’ என்பது பொருளாம். த்ரிலர் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த இப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு சவாலான பெண் பாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம் குறித்து அக்ஷய் குமார் வேதனை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.