தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்திற்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக்
கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
வக்கிர மனம் கொண்ட மனிதர்களுக்கு இந்த என்கவுன்ட்டர் பாடமாக அமையட்டும் என்றும், இந்த கடுமையான செயலைப் புரிந்த காவல்துறையினருக்கு வணக்கத்தை தெரிவிப்பதாகவும் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.