ரஜினிகாந்த் பட வாய்ப்பிற்காக மணி ரத்னம் இயக்கும் 'பொன்னியன் செல்வன்' படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆகவே இதனை 'தலைவர் 168' என குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதற்கு முன்னதாக, மணி ரத்னம் இயக்க உள்ள 'பொன்னியன் செல்வன்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதித்திருந்தார். ஆனால் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தேதிகளும் 'தலைவர் 168' படப்பிடிப்பிற்கான தேதிகளும் ஒரே நேரத்தில் வருகின்றன. ஆகவே மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதில் கீர்த்தி சுரேஷுக்கு சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே வேறு வழியில்லாமல், 'பொன்னியன் செல்வன்' படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் வெளியேற முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பை மறுத்துவிட்டு ரஜினிகாந்தின் படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கீர்த்தி முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. ஆகவே இந்த வாய்ப்பை அவர் இழக்க விரும்பவில்லை எனக் கூறியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது சம்பந்தமாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இன்னும் வெளியாகவில்லை.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவல் 'பொன்னியன் செல்வன்'. இதனை இயக்குநர் மணி ரத்னம் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி உள்ளது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திரங்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன் பொன்னியன் செல்வனை தயாரிக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனியையே கார்த்திக் சுப்புராஜின் 'பென்குயின்' படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து கீர்த்தி சுரேஷ் தற்போது அதில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கன் நடித்து வரும் 'மைதான்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.