பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 336 ரன்கள் குவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தது. ரோகித் 34 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர், ரோகித் சர்மாவுடன் விராட் கோலி இணைந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் 85 பந்துகளில் சதம் விளாசினார். பின்னர், 113 பந்துகளில் 140 ரன்கள் ரோகித் ஆட்டமிழந்தார். அவரை சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்ட்யா 26, தோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விராட் கோலி 71 (62), விஜய் சங்கர் 3 (6) ரன்களுடன் களத்தில் இருந்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் போட்டி தொடங்கியது.
மீண்டும் இந்திய அணி விளையாடியது. கேப்டன் விராட் கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 15 (15), கேதர் ஜாதவ் 9 (8) ரன்களுடன் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.