cbecpy@gmail.com      +9198944 75754

மழைக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது போட்டி : ரசிகர்கள் உற்சாகம்

Home / Cricket / மழைக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது போட்டி : ரசிகர்கள் உற்சாகம்
  16-Jun-2019  
Cricket Back to

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழைக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் ராகுல் சிறந்த பேட்டிங்கை பதிவு செய்தனர். 57 (78) ரன்கள் எடுத்து ராகுல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோகித் சதம் அடித்து அசத்தினார். 140 (113) ரன்களில் ரோகித் வெளியேற, மறுமுனையில் விராட் விளாசினார்.

இதனால் 46.4 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்களை குவித்தது. ஆனால் ரசிகர்கள் பயந்தது போலவே மழை குறுக்கிட்டது. இதனால் ரசிகர்கள் சற்று சலிப்படைந்தனர். சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது. அதன்பின்னர் மைதானத்தை தயார் செய்தனர். இந்நிலையில் மீண்டும் போட்டி தொடங்கியது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.