உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா - ஷிகார் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.
பின்னர், ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை தொடர்களில் சதம் விளாசிய இரண்டாவது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த உலகக் கோப்பை தொடரில் முதல் வீரராக விராட் கோலி சதம் அடித்து இருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 24வது சதம்.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா இரண்டு ரன் அவுட்களில் இருந்து தப்பினார். அதனை அவர் சரியாக பயன்படுத்தி சதம் அடித்துள்ளார். இந்திய அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 126, விராட் கோலி 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.