ஆஷஸ் தொடர் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்க்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 61 (94) ரன்கள் எடுத்தார். மற்றொரு பேட்ஸ்மேனான மார்னஸ் 74 (129) சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை மிரட்டினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நெருக்கடியான நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்கமால் பூஜ்ஜியத்தில் வெளியேறினார். அடுத்தடுத்து அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 27.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 67 ரன்களில் ஆல் அவுட் ஆகி சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய ஜோஸ் ஹஸ்லெவுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 52 ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துள்ளது அதன்பின்னர் தற்போது ஆல் அவுட் ஆகியிருப்பதே குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.