cbecpy@gmail.com      +9198944 75754

“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் 

Home / Cricket / “ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் 
  16-Nov-2019  
Cricket Back to

தன்னுடைய ராஜினாமா மூலம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உண்மை நிலையை வெளிபடுத்த நினைத்தேன் என்று டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராஜாட் சர்மா தெரிவித்துள்ளார். 

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூத்த பத்திரிகையாளர் ராஜாட் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இவர் டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், “டெல்லி கிரிக்கெட் சங்கத்தை என்னால் முடிந்த அளவு நேர்மையாக நடத்த முற்பட்டேன். ஆனால் தற்போது என்னால் அதை சரியாக செய்ய இயலவில்லை. ஆகவே என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன்.

என்னுடைய ராஜினாமா மூலம் நான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய உண்மை நிலையை வெளிபடுத்த நினைத்தேன். ஏனென்றால், இன்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் இருப்பவர்களில் சிலர் ஊழல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தங்கள், வீரர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் அவர்கள் தலையிடுகிறார்கள். இந்த ஊழல் விஷயங்களை சகித்து கொண்டு என்னால் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்திருக்க முடியும். ஆனால் நான் என்னுடைய ராஜினாமா மூலம் உண்மை நிலையை வெளிபடுத்த நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 

(ராஜாட் சர்மா)

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜாட் சர்மாவுடன், சிஇஓ ரவிகாந்த் சோப்ரா, கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்களான யாஷ்பால் சர்மா மற்றும் சுனில் வால்சன் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.