cbecpy@gmail.com      +9198944 75754

போட்டியின் நடுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த நாய்...!

Home / Cricket / போட்டியின் நடுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த நாய்...!
  15-Dec-2019  
Cricket Back to

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் கிரிக்கெட் விளையாட்டின்போது திடீரென நாய் ஒன்று புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம்கண்ட இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6 ரன்கள் சேர்த்த நிலையில், காட்டரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி, 4 ரன்களில்‌ போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய தொடக்க வீரர் ரோகித் சர்மா 36 ரன்களில் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்த் 71, ஸ்ரேயாஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 44 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. 

முன்னதாக, 25 ஓவரின் முடிவில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென ஒரு நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்தது. பணியாட்கள் நாயை துரத்த யார் கையிலும் சிக்காமல் அதுவாகவே மீண்டும் வெளியே சென்றது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. நாய் வெளியேறியதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.