பண மோசடி வழக்கில் ;பேட்மேன்’ உட்பட சில படங்களை தயாரித்த பிரேர்னா அரோரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் அக்ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்த ’பேட்மேன்’, அக்ஷய்குமார் நடித்த ரஸ்டம், ஏக் பிரேம் கதா, பரி ஆகிய படங்களி கிரிஅர்ஜ் என் டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் அர்ஜூன் என்.கபூருடன் இணைந்து தயாரித்தவர் பிரேர்னா அரோரா.
இவர் படத் தயாரிப்பாளர் வாசு பக்னானியிடம் படத்தின் உரிமையை தருவதாகக் கூறி, 32 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இவரிடம் சொன்ன தை போலவே பலரிடம் படத்தின் உரிமையை தருவதாகக் கூறிவிட்டு தராமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வந்த புகா ரை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தயாரிப்பாளர் வாசு பக்னானியிடம் அவர் பணம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அவரை வரும் 10 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.