முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் 167-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது
நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியானது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.
ரஜினியின் 167வது படமாக இது உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ’பேட்ட’ படத்துக்குப் பிறகு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் 80களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளத்தாகவும், நாளை முதல் மும்பையில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக போஸ்டர் அமைந்துள்ளது.
மும்பையில் நடக்கும் போலீஸ் ஸ்டோரியாக தர்பார் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தர்பார் திரைப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் ஆங்கிலத்தில் வாசகம் இடம் பெற்றுள்ளது அதில் "நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா இருக்கிறத நீயே முடிவு பண்ணிக்கோ" என இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரண்டு வேடங்களில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிகிறது.