ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை எனப் பாடலாசியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
தமிழகத்தில் இன்று காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். மேலும் வாக்களித்த பின்னர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
தனது வாக்கினை பதிவு செய்த பாடலாசிரியர் வைரமுத்து, ''ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.