cbecpy@gmail.com      +9198944 75754

மூளையில் கட்டி: போராடும் நடிகைக்கு உதவ கோரிக்கை

Home / Movies / மூளையில் கட்டி: போராடும் நடிகைக்கு உதவ கோரிக்கை
  11-Jun-2019  
Movies Back to

மூளையில் ஏற்பட்டுள்ள கட்டி காரணமாக அவதிபடும் நடிகையின் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. 

மலையாளத்தில், மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உட்பட பல படங்களில் நடித்தவர் சரண்யா சசி. தமிழில், ’பச்சை என்கிற காத்து’ படத்தில் ‘தேவதை’ என்ற பெயரில் நடித்தார். மலையாளத்திலும் தமிழிலும் ஏராளமான டிவி. தொடர்களில் நடித்துள்ள சரண்யா சசி, கடந்த 6 வருடத்துக்கு முன் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக, கடுமையாக அவதிப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதற்கிடையே, பினு சேவியர் என்பவரை திருமணம் செய்த சரண்யா சசி, தொடர்ந்து படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துவந்தார். இந்நிலை யில் அவருக்கு மூளையில் மீண்டும் கட்டி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் உடல் நிலை மோசமாகி யுள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அதிக செலவாகும் என்பதால், நடிகர், நடிகைகள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள சமூக சேவகர் சூரஜ் பாலகரனும், நடிகை சீமா. ஜி நாயரும் இணைந்து முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சரண்யா சசியின் மருத்துவச் செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஆறு முறை அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இப்போது ஏழாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சரண்யா மோசமான நிலையில் இருக்கிறார். இது அவருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், உதவி செய்வதற்காக, நடிகை சரண்யா சசி அம்மாவின் வங்கி கணக்கையும் வீடியோவில் வெளியிட்டுள்ளனர். நடிகை சீமா.ஜி நாயர், தமிழில் பைரவா, திருமணம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.