cbecpy@gmail.com      +9198944 75754

பிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா!

Home / Movies / பிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா!
  23-Aug-2019  
Movies Back to

தனிப்பட்ட விருப்பங்களின் மீது கருத்துச் சொல்ல பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நல்லெண்ண தூதர்களுக்கு உரிமை இருக்கிறது ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை வாழ்த்தியும் இந்திய பாதுகாப்பு படைக்கு ஆதரவாகவும் பிரியங்கா, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நல்லெண்ண தூதராக இருந்துகொண்டு அவர் இப்படி பதிவிடுவது சரியானதல்ல என்று பலர் விமர்சித் திருந்தனர். அவரை ஐ.நா நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை எழும்போது நடுநிலையாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. அத்துடன் பிரியங்கா சோப்ராவை நல்லெண் ணத் தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரீன் மசாரி, ஐநாவுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டர்ஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறும்போது, ’’நல்லெ ண்ண தூதராக இருப்பவர்கள் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் மீது கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. அவர்க ளது சொந்த கருத்துக்களும் செயல்களும் யுனிசெப்-பை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. யுனிசெப் தொடர்பாக அவர்கள் பேசும்போதோ, கருத்துச் சொல்லும்போதோ சார்பில்லாத நிலைப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள் என்று நம்பு கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.