cbecpy@gmail.com      +9198944 75754

“அந்த ஆவேசம் இருக்கிறது.. அதற்காக இந்திய அணியை சிறப்பாக நடத்துவேன்”- ரவி சாஸ்திரி..!

Home / Cricket / “அந்த ஆவேசம் இருக்கிறது.. அதற்காக இந்திய அணியை சிறப்பாக நடத்துவேன்”- ரவி சாஸ்திரி..!
  17-Dec-2019  
Cricket Back to

கிரிக்கெட்டில் இந்திய அணி இந்த நூற்றாண்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கும் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐசிசி தொடர்களில் வெல்ல வேண்டும் என்பதில் தனக்கு மிகப்பெரிய ஒரு ஆவேசம் இருக்கிறது என்றும், அந்தக் கனவை அடைய இந்த அணி வீரர்களுடன் இணைந்து, விடாமல் விரட்டி வருவதாகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை.

குறிப்பாக தலைமைப் பயிற்சியாளராக சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்தியா மூன்று உலக போட்டிகளில் விளையாடியுள்து. 2015 உலகக் கோப்பை மற்றும்  2016 டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை என்பவை அதில் அடங்கும். இங்கிலாந்து உலகக்கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியா, பின் போட்டியில் இருந்து வெளியேறினர்.

சாஸ்திரி, இந்தியா டுடேவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில், “நான் ஒரு வெற்றியான மனிதன். 1983-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நமது அணி வெற்றிக்கு நான் ஒரு பகுதியாக இருந்தேன். மேலும் 1985 இல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அணி வென்றபோது ஒரு பகுதியாக நான் இருந்தேன்.  நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்த இந்திய அணிக்கு நான் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகளாக இருக்கிறேன். இதையும் நான் வெல்ல விரும்புகிறேன். இனிமேல் எனது அணியுடன் சேர்ந்து ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றும் கனவை விடாமல் விரட்டுவேன்” என குறிபிட்டுள்ளார்.

சாஸ்திரி சொன்ன இந்த கருத்தும், இதே பிரச்னை குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய கருத்தும் முற்றிலும் மாறுபட்டுள்ளன. “எங்களுக்கு பெரிய போட்டிகளிலும் பெரிய தொடர்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. மேலும் எங்களால் முடிந்தவரை முயற்சியை கொடுக்க விரும்புகிறோம்.

ஆனால், வெற்றி, எண்ணிக்கை மற்றும் முடிவு எண்ற அடிப்படையான விஷயங்களில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்தினால், நீங்கள் செயல்பட்டை ரசிக்க மாட்டீர்கள். ஒரு அணியாக  நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம். ஏனெனில் நாங்கள் இந்த செயல்பாட்டை அனுபவிக்கிறோம்” என்றும் கூறிவுள்ளார்.

மேலும் “இது எனக்கு ஒரு ஆவேசம். எனது அணியுடன் நான் இணைந்து அதை துரத்தப் போகிறேன். இந்த அணி இந்திய கிரிக்கெட் வரலாற்றில், உலக கிரிக்கெட்டில், நூற்றாண்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக நிற்கும்” என்று ரவி சாஸ்திரி வாக்குறுதி அளித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.